• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தேத்தண்ணி வித் நிதா

நிதனிபிரபு

Administrator
Staff member
தேத்தண்ணி வித் நிதா!


என்னைப்பற்றி, என் கதைகள் பற்றி ஏதாவது தெரிந்துகொள்ள விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் இங்கே நீங்கள் கேட்கலாம். என்னால் முடிந்த, எனக்குத் தெரிந்த பதில்களை சொல்ல ஆவலாய் இருக்கிறேன்.

ஆகமொத்தம், 'வாங்க பழகலாம்!'

நட்புடன் நிதா

22.06.2022


------------------------------------------------------------------------------------------------------
வணக்கம் வணக்கம்!


கேள்வி ஏதாவது கேளுங்க என்று சொன்னா கேட்டு வச்சு இருக்கிறீங்க பாருங்க.. ஹாஹா உண்மையிலேயே பலதடவைகள் சிரித்துவிட்டேன். மிகவும் நிறைவாகவும் உணர்ந்தேன். என் எழுத்து வாசகர்களால் நேசிக்கப்படவேண்டும் என்பதுதான் என் அவா. ஆனால், அதே எழுத்து என்னையும் நேசிக்க வைத்திருக்கிறது என்பதை அறிந்து நெகிழ்ந்துபோனேன். அதற்கு, அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!


பலர் என்னைப்பற்றி அறிந்துகொள்ள ஆவலாக இருப்பது தெரிகிறது! சரி வாங்க பழகலாம்!

நான் ஈழத்தைத் தாயகமாகக் கொண்டவள்! என்னுடைய முழுப்பெயர் நிதர்சினி. அது சுருங்கி நிதா ஆயிற்று. எழுத ஆரம்பித்தபோது பள்ளிக்காலத்தில் என் பெயராக இருந்த நிதனியை வைத்துக்கொண்டேன். கணவரின் பெயர் பிரபு. நிதனி + பிரபு = நிதனிபிரபு.

(ஒரு ரகசியம் சொல்லவா? கதைகள் வாசிப்பது தெரிந்தாலே திருமணமானவள் என்று கூடிப் பாராமல் விறகுக்கட்டையால் சாத்திவிடுவார் என் அம்மா. அவர் ஒரு நீலாம்பரி! எங்கள் பக்கம் எல்லாம் உருப்படாத பிள்ளைகள் செய்யும் காரியம் தான் கதை வாசிப்பது. அப்படித்தான் கணிப்பார்கள். ரமணி அம்மாவின் கதைகள் ஒளித்துப் படித்து வாங்கிக் கட்டிய அனுபவம் எல்லாம் நிறைய. அதனால், என் உறவுகள் யாரும் கண்டு பிடிக்கக்கூடாது என்று, அந்தக்காலத்தில் மரு ஒன்றை வைத்துக்கொண்டு மாறுவேடத்தில் நம்பியார் வருவதுபோல நானும் ‘நிதனிபிரபு’ என்கிற மாறுவேடத்தில் கதை எழுத ஆரம்பித்தேன். ஆனால், அதை என் வீட்டிலேயே எனக்கெதிராக இயங்கும் ‘அக்கிரமம் நிறைந்த குரூப்’ அம்மாவிடம் போட்டுக் கொடுத்துவிட்டது. ஆச்சரியமோ ஆச்சரியம் அம்மா திட்டவில்லை. தரமாக எழுது என்று மட்டும் சொன்னார். அன்றைக்குத்தான் எனக்குத் தெரியும் ‘என்ர அம்மாவும் நல்ல மனுசி’ என்று!)

என் பிறந்த ஊர் எது தெரியுமா? பிரணவன் வாழ்ந்தானே அதே கிளிநொச்சி! அந்த இரணைமடுக்குளம் என் உயிர் சொந்தம்! அங்குதான் பிறந்தேன். ஆனால் வளர்ந்தது எல்லா ஊர்களிலும். நாட்டுப் பிரச்சனையால் சிறு வயதிலேயே கிளிநொச்சியை விட்டு வெளியேறி, காலி, கொழும்பு, மட்டக்களப்பு, வவுனியா என்று எல்லா இடங்களிலும் வசித்திருக்கிறேன்.

உயர்தரம் வரைதான் படித்திருக்கிறேன். அதாவது, உங்கள் ஊர் ப்ளஸ் 2 என்று நினைக்கிறேன். கடந்த பதினாறு வருடங்களாக ஜேர்மன் வாசம். இரண்டு குழந்தைகள். ஒரேயொரு கணவர். மகனுக்கு 15 வயது. மகளுக்கு 13 வயது. கதைகள் வாசிப்பது என்பதை விட, ரமணிசந்திரனின் கதைகளை உயிருக்குள் நிரப்புவது நிரம்பப் பிடிக்கும்! நான் ஓர் ரமணித்தேனீ! இதுதான் என் பொழுதுபோக்கு. இப்போது கதை எழுதுவதை பொழுதுபோக்காக மாற்றியிருக்கிறேன்!

அவ்வளவுதான் நான்!


ஓகே! இனி மற்றைய கேள்விகளுக்கு வருவோம்!



Hai mam story super valtthukal nineivellam neeyagida vanthen story link tharamudiyuma please

மிக்க நன்றி! என் கதைகள் எல்லாமே அமேசானில் இருக்கிறது. ஒரு கதை புதிதாக எழுதிக்கொண்டு ஏற்கனவே எழுதிய கதை ஒன்றை ஒவ்வொரு அத்தியாயமாக பதிந்துகொண்டு இருக்கிறேன். நிச்சயமாக NNV யும் வரும். மிகுந்த நன்றி.


Hi nithani mam, we want serious love story like thanimai Thuyar theradho..I love that story..when u give that type of story?and where are uliving mam?pls say something about ur family mam?

‘அவள் ஆரணி’ உங்களின் ஆவலுக்குத் தீனி போடும் என்று நம்புகிறேன். கடந்த 16 வருடங்களாக ஜெர்மனியில் குப்பை கொட்டுகிறேன். மற்றும்படி என்னைப்பற்றி மேலே சொல்லியிருக்கிறேன். பாருங்கோ. நன்றி!

Unkal story rompa pedikum akka

மிக்க மிக்க நன்றிமா!

I want to see your face and full family too.its a kind of request to know abt my hero writer.

ஹாஹா! வீக்கெண்ட் அதுவுமா எதுக்கு பேயைப் பார்க்க ஆசைப்படுறீங்க? போட்டோ போடுறேன். ஏதாவது நடந்தால் கம்பனி பொறுப்பேற்காது


குட்டி கதைகள் மட்டுமே வருகிறது.ஒரு பெரிய நாவல் எப்போ கொடுப்பீங்க?

இதோ ஆரம்பித்தாயிற்று! அவள் ஆரணி வெகு விரைவில் வருகிறாள்.

when u repost 'ninaivellam neeyakida vandhean ' full story. i need to read it again.

நிச்சயமாக மறுபடியும் பதிவேன். ஆனால் எப்போது என்று எனக்கே தெரியாது. மிக்க நன்றி!



ஸ்தோத்திரம் சகோதரி ...இவ்வளவு தத்ரூபமாக எப்படி உங்களால் எழுத முடிகின்றது?

அவ்வ்வ்வ்வ்… றோஸ் றோஸ் ரோசாப்பூவே! பூவே நீயே! ஹாஹா அக்கா, காமெடி பண்ணுறன் எண்டு சொல்லிக்கொண்டு சீரியஸா அழ வைக்கிறேல்ல!


Sis next big love novel vaenum. Pratilipi la second story konjam thaan irunduchu. Anda link kedaikamal sis.

ஆரம்பிச்சுட்டேன் மா! அவள் ஆரணி. பிரதிலிபி ல EUU முழு நாவலும் இருக்கு, பாருங்க.

நிதா அக்கா ஒரு முறையாவது உங்கள் முகத்தைக் காண வேண்டும்.

எதுக்கு? விசப் பரீட்சை எல்லாம் வேண்டாமே!

very nice lovely story mam

மிக்க மிக்க நன்றி!

En solai poove ud podunga pls

அடப்பாவிகளா? ஏதாவது கேளுங்க என்றால் இங்கயும் ud கேக்குறீங்களே.. போட்டுட்ட்ட்டேன்!

நல்ல பிரெண்ட்லி ஆ பேசுறீங்க. ஆனாலும் நெருங்க கொஞ்சம் தயக்கமா இருக்கும். இதுல எது நீங்க?

எதுல எது நான்? சரியா விளங்க இல்லை. ஆனால், கேலி கிண்டல் சிரிப்பு எல்லாம் மிக மிகப் பிடிக்கும். ஆனால், தன்னிலை இறங்கி எங்கும் வரமாட்டேன். அதனால் சற்றே தயக்கம் வரலாம்..
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
Nitha akka.... Na ungaloda stories ellam ladyswings la read panen... But Athula na member illa... Ungolada name vaichu thedi thedi read panuven.... Tenth la irunthu tha read panituruken.... Oru paper vida maten.... But unga stories oru two years tha read panitu iruken.... Athum ungaloda elangai tamil romba azhagu.... Max pechu valaku neriya tirunelveli la pesra mathriye irukum...
Enakum tirunelveli tha... Romba Azhagana eluthu nadai ungaluku..... Elangai makkal epdi lam vazhranganu unga stories la irunthu konjam therium.... Akka elangai tamil makkal Ippa epdi life la irukanga ka?


மிக்க மிக்க நன்றிமா! இலங்கை தமிழ் மக்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். வாழத்தானே வேண்டும்!


அக்கா டைட்டிலே சும்மா அள்ளுது..... உங்களால் மாட்டும் எப்படி இப்படி எழுத முடியுது...... உயிர் உருக்கி நெஞ்சம் நெகிழ மனம் லேசாக ...... உங்க எழுத்து ஒரு மந்திரக்கோல் அக்கா..... அது என்னை சுத்தி சுத்தி அடிக்கிது..... உங்க கிட்ட என்ன கேக்க...நீங்க நிறைய நிறைய எழுதணும் அதை நான் படிக்கணும் இது தான் என்னோட ஆசை.... இன்னும் ஒண்ணே ஒன்னு...நீங்க இந்தியா வந்தா உங்களை நேரில் பாத்து தே தண்ணீ வித் நிதா அக்கானு ஒரு டீ குடிக்கணும்..... அம்புட்டு தான் ..........

மிக்க மிக்க நன்றிமா. தரணி தானே? ஹாஹா.. நிச்சயமாக இந்தியா வந்தால் குடிக்கிறோம். டீல்!


கேக்க முடியாது என்ன செய்வீங்க?
நல்லது! நல்லா இருங்க..


கேள்விலாம் இல்லை.. உங்கள் தமிழ் அழகோ அழகு... அருமையானநாவல்... தொடர்ந்து உங்களின் பணி சிறக்க வாழ்த்தூக்கள் சிஸ்டர்..

மிக்க மிக்க நன்றி



உங்கள் நாவல் எனக்கு ரொம்பவும் புடிக்குமே!!!!! நான் ஈஸ்வரி... அரியலூர்

மிகவும் நன்றி ஈஸ்வரி!


Hi....... I am vilashini,unga story ellam super.! ....... naa unga எந்தன் உறவுக்கொரு உயிர் கொடு story ah pratilipi la padichen but anga pathi story than irunthuchu.....Then senduram la antha story padichen.......Why neega pratilipi la continue panala......? And neenga oru short story eluthunenga athoda continuation ah நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் atha story ah epo update paduvinga sollunga sis....?

மிக்க நன்றி விலாசினி! EUU பிரதிலிபி ல முழுதாக பதிவேற்றம் செய்துதான் இருக்கிறேன். எங்களுக்கு என்று சொந்தமாக ஒரு சைட் செந்தூரம் இருக்கிறபோது, பிரதிலிபியில் போடுவதில் அர்த்தம் இல்லையே! பிரதிலிபி வாசகர்களுக்காக மட்டுமே ஏற்கனவே போட்டிருந்த கதைகளை அப்படியே விட்டிருக்கிறேன். நிச்சயமாக NNV அப்டேட் செய்வேன். ஆனால், கொஞ்ச நாட்களாகலாம்.

கடைசி அத்தியாயம் பதியும் போது மட்டும் உங்கள் எல்லோருக்கும் சொல்லி வைத்தார் போல தடங்கல் வருவது ஏன் ??

‘உங்கள் எல்லோருக்கும்’ என்று யாரையெல்லாம் சொல்லுகிறீர்கள்? மற்றவர்களைப் பற்றி நான் என் கருத்தைச் சொல்வது தவறு! என்னளவில், நிச்சயம் ஒவ்வொரு கதைக்கும் முடிவில் திணறுவேன்தான்.

ஆரம்பத்திலிருந்து கதையின் கடைசிப்பகுதி வரைக்கும், அங்கங்கே ஒவ்வொரு விஷயங்களையும் சொல்லியும் சொல்லாமலும் விட்டுக்கொண்டு வருவோம். அதை எல்லாவற்றையும் கதையின் கடைசிப்பகுதியில் நிச்சயம் சொல்லியாக வேண்டும்! நியாயப்படுத்த வேண்டியவற்றை நியாயப்படுத்தி, விளங்கப்படுத்த வேண்டியவற்றை விளங்கப்படுத்தி ஒவ்வொரு நிகழ்வுகளுக்குமான சரியான காரணங்களை முன்வைக்க வேண்டும். அதோடு, ‘முற்றும்!’ ஐ பார்த்து ‘ஓ..! கதை முடிந்துவிட்டதா?’ என்று அறிந்துகொள்வதை விட, கடைசிப்பகுதியை வாசித்துக்கொண்டு வரும் வாசகர்கள் கதை முடிவை நோக்கிப் பயணிக்கிறது என்று மனதில் ஒரு இதயத்தோடு முழுமையாக உணரவேண்டும் என்று நான் விரும்புவேன்!

இவை எல்லாம் சேர்ந்து என்னை நன்றாகவே திணறடித்துவிடும்.


Ungalai Patrick konjam sollungal... Athavathu unga family neenga ippa enga irugeenga Enna padichu irugeenga unga hobbies etc

பெரிதாக ஒன்றுமில்லை. ஆனாலும், உள்ளதை மேலே சொல்லியிருக்கிறேன். உங்களின் ஆவலுக்கு மிக்க நன்றி!


Nan ungaloda Ella stories m padichu iruken. Enjoy solai poove is my all time favorite.
theththanni tharuveengalaa Nitha?


மிக்க நன்றி! ஹாஹா, நிச்சயமாக தேத்தண்ணி தருவேன். (பக்கத்தில இல்ல என்கிற தைரியம், அதுதான் அடிச்சு விடுறன்.)


ஒரு கேள்வியும் இல்லை.உங்கள் spontaneous ரொம்ப பிடிக்கும்

மிக்க நன்றி!


உங்க நாவல்கள் படிக்கிறப்போ உலகநாயகனை வென்ற முத்தம் உங்களுக்கும் தரணும் போல இருக்கே ஏன்கா?

அடேய்!!! யார்ரா இந்த லகரபாண்டி? கற்பனைகளில் உதிப்பவை கதைகள். அவை அதனோடு மட்டுமே நிற்பதுதான் அழகு! ஆனாலும், உங்களின் அன்புக்கு மிகுந்த நன்றி! நேரில் காண்கயில் அக்கா என்றபடி ஒரு அணைப்புப் போதும்! அதுவே விலைமதிப்பில்லாத அன்புக்குச் சமம்!


Hey Nitha... எப்படி இப்படி அழகா,இளமையா கதை எழுதரீங்க??உங்களுக்கு கதை எழத வரும்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?

நன்றி நன்றி! உண்மையிலேயே கதை எழுத வரும் என்றெல்லாம் தெரியவே தெரியாது! எழுதும் ஆவலும் வந்ததில்லை. நிறையக் கதைகள் படிப்பேன். அதற்கு விமர்சனமும் வெகு காரசாரமாக எழுதுவேன். அதுவே, ‘எழுதிப்பார்க்கலாமே’ என்று பலர் என்னைத் தூண்டக் காரணமாக இருந்தது. ஒரு கட்டத்தில், ‘சரி எழுதித்தான் பாப்போமே’ என்று ஆரம்பித்ததில் உருவானதுதான் நேசம் கொண்ட நெஞ்சமிது நாவல். அந்த நேரம் வாசகர்கள் எனக்கு வழங்கிய ஆதரவு மெய்யாகவே அளப்பரியது. அந்த ஆதரவுதான் தொடர்ந்து எழுதும் ஆசையைத் தூண்டியது. அவ்வளவுதான்..

உங்கின் நிஜப்பெயரே நிதனிபிரபு தானா

நிதர்சினி தான் முழுப்பெயர்.


நிதாவிற்கு பிடித்த ஊர் சமையல்&நபர்
பிடித்த ஊர்? இதற்கு சுருக்கமாக எப்படிப் பதில் சொல்வது என்று தெரியவில்லை. என் பத்தொன்பதாவது வயதிலிருந்து ஜெர்மனில் வசிக்கிறேன். அந்த வகையில் என் வாழ்க்கைப்படத்தை நான் கற்றது இங்கேதான்! என் அனுபவங்களும் இங்கேதான் கட்டியமைக்கப் பட்டிருக்கிறது. அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத சுத்தமான ஒரு நாடு. அதனால் ஜெர்மனி மிகவும் பிடிக்கும்! ஆனால், ஆத்மார்த்தமாக உள்ளம் தேடுவது தாயகத்தை மட்டுமே! சொர்க்கமே என்றாலும் சொந்த ஊரைப்போல வராதே!

சமையல் எப்போதுமே என் கையால் நான் சமைக்கும் எல்லா உணவும். அம்மா வைக்கும் சொதி என்றால் உயிர். காலையில் அம்மா குழைத்து ஊட்டிவிடும் பழையசோறு, மிளகாய்ப் பொரியலுக்கும் இன்றும் ஏங்குகிறேன். இலங்கையை விட்டு வெளியேறும் வரைக்கும் எவ்வளவு அடி வாங்கினாலும் அம்மாவின் கைச்சோறுதான் உலகம்!

பிடித்த நபர்? ஒருவரை என்று எப்படி வகுப்பேன்? என் கணவர், என் அப்பா, அம்மா, பிள்ளைகள்.. அதுவும் என் குழநதைகள் தான் என் உலகம்!


நீங்கள் எத்தனை கதைகள் எழுதியுள்ளீர்கள் இதுவரை

எனக்கே தெரியாது. குறுநாவல் பெருநாவல் எல்லாம் சேர்த்து 13 என்று நினைக்கிறேன். செந்தூரத்தில் நிதனிபிரபுவின் தொடர்கதைகள் பகுதியில் பார்க்கலாம்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
ஆஹா ஆஹா... தேத்தண்ணி வித் நிதா வா...இது எண்ட செந்தூரனண்ட டையலாக் ஆச்சே....

ஹாஹா.. அதே அதே!


செந்தூரனை மறுக்கா கண்ல காட்டுவீங்கலா

அவனையே பிடிச்சுத் தொங்காதீங்க. எனக்கே பொறாமையா இருக்கு. ஹாஹா நிச்சயமாக! என்ன அவன் கவின்நிலாவோடு தேன்நிலவில் இருப்பதாகச் செய்தி!


உங்கள் ஒவ்வொரு கதையும் மற்ற கதைகளில் இருந்து வேறுபட்டு ஒன்றின் சாயல் மற்றதில் வராமல் இருக்கும்... அது மிகவும் பிடிக்கும் எனக்கு... வாழ்த்துக்கள்…

மிக்க மிக்க நன்றி!


உங்கள் கதைகளின் கருக்களை எங்கனம் தேர்ந்தெடுக்கறீர்கள்

ஏதோ ஒரு புள்ளியில் மனம் தானாகப் போய்ச் சிக்கிக்கொள்ளும். என் கட்டுப்பாடுகளையும் தாண்டி ஒரு விடயம் என் சிந்தையை ஆழ்கையில் அதைப் பற்றிக்கொள்வது வளமை. அப்படியானவற்றை உடனே ஒரு போல்டர் திறந்து போட்டுவைப்பேன். மனம் அதைப்பற்றிச் சிந்திக்கும் போதெல்லாம் குறித்தும் வைப்பேன். முடிந்தவரை பெண்களை நிமிர்வாக தைரியசாலிகளாக, நடக்கிற அநியாயங்களிலிருந்து போராடி மீள்வதுபோன்று காட்டும் எந்த விடயமும் என் நெஞ்சில் ஆழமாகப் பதியும். அதற்காக சுதந்திரம் என்று சொல்லிக்கொண்டு குடும்பக் கூட்டிலிருந்து வெளியேற்றுவதையும் விரும்புவதில்லை. பிறந்தவீடு அல்லது புகுந்த வீடு என்கிற பாதுகாப்பான கூடுகளில் ஏதோ ஒன்றில் பெண் என்பவள் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவள். நியாயமான விதிவிலக்குகள் வேறு! அவையே கருவாகிக் கதைகளாகிறது.


உங்கட தமிழ் ரொம்ப அழகா இருக்கு...உங்கட போலவே கதைக்க ஆசயா இருக்கு....என்ன பண்ண நான்... கொஞ்சம் இடக்கு மடக்கா உங்கள் பேச்சு வழக்க கொலை பண்ணி இருந்தா மன்னிச்சு

ஹாஹா.. அப்படி அல்லமா.. தத்தித் தவழும் குழந்தைதான் நன்றாக நடக்கும் குழந்தையைக் காட்டிலும் மனத்தைக் கவருகிறவள்!


ஓர் எழுத்தாளராக நீங்கள் கடைப்பிடிக்கும் பண்புகளில் ‘நிதா’வை எங்களுக்குத் தனித்துக் காட்டுவதாக நீங்கள் கருதுவது?

முதலாவதாக என் தமிழ்! என் ஆரம்பக் கதைகளைப் பார்த்தீர்களானால், சுத்தமான தமிழில் எழுதி இருப்பேன். அப்போதெல்லாம் மனதில் வலிக்கும். ஏதோ ஒரு ஒட்டாத தன்மை! என் பேச்சுத் தமிழை வெளியே கொண்டுவரவேண்டும் என்கிற வைராக்கியமே மனதில் இருந்தது. ஆனால், நானே எழுத்துலகுக்கு புதிதாக பிரவேசிப்பவள். என்னோடு என் தமிழையும் கொண்டுவந்தால் என்னாகுமோ என்கிற கேள்வி நல்ல தமிழில் எழுத வைத்தது! ஓரளவு, என் எழுத்தைத் தேடியும் மக்கள் வருகிறார்கள் என்கிற நம்பிக்கை வந்தபிறகு, நான் பேசும் தமிழை அறிமுகம் செய்யவேண்டும் என்கிற காரணம் ஒன்றுக்காக மட்டுமே எழுதிய கதைதான் திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு!

அதன்பிறகு அதையே என் எழுத்தாக்கிக்கொண்டேன். இன்று பலருக்கு எங்கள் பேச்சுத் தமிழ் அறிமுகமாகியிருக்கிறது! அந்தவகையில் நான் தனித்துத்தான் தெரிகிறேன் என்பேன்!

அடுத்ததாக, என் தாயகத்தைப் பரவலாக அறிமுகமும் செய்திருக்கிறேன் என்பேன். ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு நகரங்கள். இந்தியா எனக்கும் அந்நியமே. ஆனாலும், சிந்திக்கையில் அப்படி உணர்வதில்லை. காரணம், கதைகள் திரைப்படங்கள் வாயிலாக நாம் அறிந்த தேசம் போன்ற ஒரு உணர்வைத் தருவதுண்டு! அதேபோலவே உங்கள் எல்லோருக்கும் இலங்கையை உங்களுக்கு மிகவும் தெரிந்த தேசமாக மாற்றவேண்டும் என்கிற எண்ணமிருந்தது. ஓரளவுக்கு அதில் வெற்றிதான். இனி வரும் காலங்கள் மிகுதியையும் செய்யும்!

மற்றும்படி என் கதைகளின் நாயகிகள் நிமிர்வானவர்கள் என்கிற எண்ணம் எனக்குண்டு!


சிறு கதைகளை விரிவாக்கம் செய்து நாவலாக எழுதும் வித்தையை எங்களுக்கும் கற்றுத் தாருங்களேன் ??

ஹாஹா… வச்சுக்கொண்டா வஞ்சகம் செய்றன்? அது என்னவோ நடக்குது.. ஒன்றுமே விளங்குது இல்ல..


மொத்தம் எத்தனை நாவல் எழுதி இருக்கீங்க? நான் எல்லாம் படிச்சாச்சா னு தெரிஞ்சுக்கணும்…

அடப்பாவி ஹாஹா.. என்னா ஒரு வில்லத்தனம். 13 என்று நினைக்கிறேன். நன்றி!


நீங்க பொறந்தது, அப்புறம் இப்போ இருக்கும் இடம்?

பிறந்தது கிளிநொச்சி இப்போது குப்பை கொட்டுவது ஜேர்மன்.


உணர்வு பூர்வமான நிங்கட எழுத்துக்களின் தொடக்கம்..உங்கள் வாசிப்பு அனுபவம்...நிங்கட விருப்பமான நிங்கட கதைகளில் ரசிச்சு எழுதின ஒரு பகுதி...போதுமா இன்னும் இருக்கு... லவ் யூ வெரி மச் கா..இது நான் யார் என்டு கண்டுபிடிங்கோல் அதுவும் என் கேள்வி..

என் எழுத்தின் தொடக்கம் விமர்சனங்கள் தான் மா. கதைகள் நிறைய வாசிப்பேன், விமர்சிப்பேன். அது எழுதத் தூண்டியது! என் வாசிப்பு ஒரு காலத்தில் ரமணி அம்மா மட்டுமே என்று சுருங்கி இருந்தது. பிறகு பல இணையத்து எழுத்தாளர்களாக விரிந்தது. ரமணி அம்மாவைத் தாண்டி ரோஸி அக்கா, உஷாந்தி, நித்யா கார்த்திகன், மல்லிகா மணிவண்ணன் இவர்களின் கதைகள் எல்லாமே நேசித்து வாசிப்பேன். அவர்களின் ஒவ்வொரு எழுத்துக்கும் நான் மிகப்பெரிய ரசிகை!

அமேசான் வந்தபிறகு இன்னும் என் வாசிப்பு உலகம் விரிந்திருக்கிறது. யார் என்றே தெரியாதவரின் எழுத்தை வாசித்துப் பார்ப்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன். அந்தவகையில் பல அனுபவங்கள் கிடைத்திருக்கிறது.

லவ் யூயூ டூ செல்லம்! jasha?

நான் ரசிச்சு எழுதிய இடங்கள் எல்லா கதையையும் இருக்கே.. அவ்வ்வ்..

நேசம் கொண்ட நெஞ்சமிதுவில் நாயகி நாயகனை நியாயம் கேட்கும் இடங்கள் எல்லாமே பிடிக்கும். எந்தன் உறவுக்கொரு உயிர்கொடு வில் ரவி தன் மகளை உணர்ந்து தவிக்கும் இடமெல்லாம் பிடித்து எழுதினேன். பள்ளிக்கூட நிகழ்வு எழுதும்போது அழுத நினைவு.

சூர்யா லட்சனா கதையில் வரும் பல இடங்கள். குண்டு வெடிக்கும் இடம், நாயகன் அறிமுகமாகும் இடம் இப்படியே நகர்ந்து கடைசியாக பிரணவனின் சைக்கிள் தேர் பயணம் வரை மிகவும் ரசித்து எழுதினேன்.


நிதனியே சின்னப் பெயர். பிறகு அதை ஏன் நிதா என்று இன்னமும் சுருக்கி வைத்துள்ளீர்கள்?

ஹாஹா.. என் பெயர் நிதர்சினி. படிக்கும் காலத்தில் நிதனி. அதுவும் சுருங்கி நிதா ஆகிற்று. இதில் எதையும் நான் வைக்கவில்லை.


உங்க கதை ரொம்ப அருமையா இருந்தது அதுவும் அந்த தமிழ் அழகு ! திரும்ப அடுத்த கதை எப்ப போடுவிங்க ....

அறிவிப்புப் போட்டுவிட்டேன். வெகு விரைவில் ஆரம்பம்!


நீங்கள் எப்ப சுவிஸ் நாட்டிற்கு வாறீங்கள்? ?

ஐம்பது தடவைக்குமேல் வந்து போயாச்சு. இனி நேரம் கிடைக்கோணுமே. கிடைத்தால் கட்டாயம் வருவேன்.


கேள்வி என்று எதுவும் இல்லை ரமணி சந்திரன் அம்மாவின் கதைகளை தவிர வேறு எந்த கதைகளையும் படிப்பதில்லை என்று இருந்த என்னை உங்கள் கதைகளுக்கும் அடிமையாக்கி விட்டீர்கள் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி இப்படிக்கு உங்கள் கதைகளின் விசுவாசி சந்திரா பரிசுப் பிராமணியம்

மிக்க மிக்க நன்றி! ரமணி அம்மா என்பவர் நான் போற்றும் எழுத்துக்குச் சொந்தக்காரி. அவருக்கு அடுத்ததாக என் எழுத்தை நேசிப்பதாகச் சொல்லி இருக்கிறீங்க. மிகுந்த நிறைவும் சந்தோஷமும்!

அப்பாடி! எல்லா கேள்விக்கும் பதில் சொல்லியாச்சு! மூச்சு வாங்குது மக்களே!

போட்டோ போடுறேன்.. நடக்கும் பேரழிவிற்கு நேக்கா மேக்கா கம்பனி பொறுப்பேற்காது!








நானும் என் தேநீர் கோப்பையும்!
15578708_1192304494190614_8773330027216595906_n.jpg
 
Last edited:

Asath

New member
Hi நிதா நலமா உங்கள் கதைகள் எல்லாமே பிடிக்கும் ஆனால் உங்கள் பதிலில்இருக்கும் நகைச்சுவை கதையில் இல்லையப்பா கேரக்டரில் மூழ்கி என்னால் அழாமல் படிக்க முடியவில்லை நான் உங்களை சீரியசானவர் என்று நினைத்திருந்தேன் அப்படி இல்லை என்று உங்கள் பதிலிலும் உங்களை பார்த்தாலும் தெரிகிறது குடும்பபோட்டோ சூப்பர் அழகாக வே இருக்கிறீர்கள் எதற்கு இந்த நீக்கா மேக்கா துறுதுறுஜீவனி மாதிரி ஒரு ஹீரோயின் ப்ளீஸ் ஆரணிக்காக வெயிட்டிங்
 

Rena

Active member
Hi nitha super .first unga name nirharsini supera irukku.na unga elutha vachu ungalukku oru image assume panuvomla ,apdiye irukkinga nu solla mudiyadu .konjam color kooda irukkinga.konjam poramai enakku.ipo recent a Dan papa voda cookery section read panen.samathu ponu.en ponnum valanda samaipanga nu irukken.Kathiroli my daughter name.5vayasu aga podu may 1Vanda.enadan paiyan irundalum ponnu illana life e fulfill agadu.edo solla vandu enamo solitu irukken.coffee with nitha u en question LA kekala.epo inda questions LA collect paniga.pongu aattam.inform panirunda nanum kettu irupen la...
 

Sharly usha

Active member
Thank you akka. Nanum ungal photos ketanumnu than nenaithen akka. Nenga ethum nenaichupengalonu kekala. Already Rosie akkavoda photo pathiruken, ungala pakanumnu Roomba asaiya irunthathu. En manathukku piditha rendu akkavoda photos pathuten. ???
Nengalum sinthuvum ontrupola irukenga akka. Family photo super.
 
Top Bottom